Monday, December 12, 2011

கப்ரை முத்தமிடலாமா...?


حَدَّثَنَا عَبدُ الْمَلِكِ بنُ عَمْرٍو ، حَدَّثَنَا كَثِيرُ بنُ زَيْدٍ ، عَنْ دَاوُدَ بنِ أَبي صَالِحٍ ، قَالَ : أَقْبلَ مَرْوَانُ يَوْمًا فَوَجَدَ رَجُلًا وَاضِعًا وَجْهَهُ عَلَى الْقَبرِ ، فَقَالَ : أَتَدْرِي مَا تَصْنَعُ ؟ فَأَقْبلَ عَلَيْهِ فَإِذَا هُوَ أَبو أَيُّوب ، فَقَالَ : نَعَمْ ، جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ آتِ الْحَجَرَ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " لَا تَبكُوا عَلَى الدِّينِ إِذَا وَلِيَهُ أَهْلُهُ ، وَلَكِنْ ابكُوا عَلَيْهِ إِذَا وَلِيَهُ غَيْرُ أَهْلِهِ " .


தாவூத் இப்னு சாலிஹ் அறிவிக்கிறார்:

ஒரு நாள் [மதீனாவின் ஆளுநராகிய] மர்வான் [இப்னு ஹகம்] ஒரு மனிதர் [ரஸுலுல்லாஹ் அவர்களின்] கப்ரின் மீது தமது முகத்தை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் [அம்மனிதரிடம்] நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டார். பின் மர்வான் அவரை நெருங்கியபோது அவர் [நபித்தோழரான] அபூ அய்யூப் அல்-அன்சாரி என தெரியவந்தது. அபூ அய்யூப் அவர்கள் [மர்வானிடம்] : "ஆம். நான் ரஸுலுல்லாஹ் அவர்களிடம் வந்தேன் ஒரு கல்லிடமல்ல, ரஸுலுல்லாஹ் அவர்கள் உங்கள் மார்க்கத்தின் பாதுகாவலர் மார்க்க பற்றுள்ளவராக

Thursday, December 1, 2011

கப்ர் உள்ள பள்ளியில் தொழலாமா..?




‘யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில்
அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக
ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)

இறைவா எனது கபுரை வணக்க சிலைகளை போல் ஆக்கி விடாதே! யார் நபிமார்களின் கபுர்களை மஸ்ஜித் ஆக்கினார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வின் கடுங்கோபம் உண்டாகட்டும் (மிஷ்காத்)

இவ்வாறான ஹதீத்களை வைத்து சிலர் கப்ர் உள்ள பள்ளியில் தொழ முடியாது என கூறுகின்றனர். உண்மையில் "கபுர்களை மஸ்ஜிதாக்குதல்" என்பதால் கருதப்படுவது என்ன??

இவ்வாறான ஹதீத்களை பற்றி விளக்குகையில் ஃபிக்ஹ் கலை மேதை இமாம் இப்‌னு ஹஜர் ஹைதமி (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்:"கபுர்களை மஸ்ஜிதாக்குதல் என்பதன் பொருள் கப்ரின் மேல் தொழுதல் அல்லது கப்ரை கப்ரை நோக்கி (கிப்லாவாக்கி) தொழுதல் ஆகும். மேலும் இந்த தடுப்புச் சட்டம் ஆனது நபிமார்கள் வலிமார்கள் போன்ற சங்கைக்குரியவர்களின் கப்ருகளுக்கே செல்லுபடியாகும..."
(நூல்: ஸவாஜிர்)
மேலும் ஹதீத் வல்லுநர் ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்‌னு ஹஜர் அஸ்கலாநி (رحمه الله)
அவர்கள்  ஹதீதை பற்றி விளக்குகையில்