கத்மு (ختم) என்பதற்கு முடித்தல் என்று அர்த்தமாகும். என்றாலும், இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறை அந்த கத்மு என்ற வார்த்தையை குர்ஆன் ஓதி முடித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றது. சமூக வழக்கில் குர்ஆனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ ஓதி அதன் நன்மையை எம்மில் வபாத்தானவர்களுக்கு சேர்த்து வைப்பதற்கு "கத்தம்" என கூறுகிறோம். இதற்கான ஆதாரங்களில் சில இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா (رضى الله تعالى عنها) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (صلى الله عليه وسلم) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் ஸதகா செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (صلى الله عليه وسلم) அவர்கள் "ஆம்' என்றார்கள்
ஸஹீஹ் முஸ்லிம்
கிதாபுஸ் ஸகாத்/ ஹதீத் எண் 1830
இந்த ஹதீதின் பிரகாரம் அந்த ஸஹாபி குறித்தவொரு செயலை பற்றி ரஸுலுல்லாஹ்விடம் கேட்கவில்லை. பொதுவாக ஸதகா செய்தால் அது இறந்தவரை போய்ச் சேரும் என்றுதான் ரஸுலுல்லாஹ் கூறுகிறார். இதிலிருந்து ஸதகா எனும் வரையறைக்குள் அடங்கும் எந்தச் செயலையும் செய்து அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்த்து வைக்கலாம் என்பது தெளிவு.இனி ஸதகாவினுள் அடங்கும் செயல்கள் எவை என்பதையும் ரஸுலுல்லாஹ் கூறாமல் போகவில்லை.
ஆயிஷா (رضى الله تعالى عنها) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (صلى الله عليه وسلم) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் ஸதகா செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (صلى الله عليه وسلم) அவர்கள் "ஆம்' என்றார்கள்
ஸஹீஹ் முஸ்லிம்
கிதாபுஸ் ஸகாத்/ ஹதீத் எண் 1830
இந்த ஹதீதின் பிரகாரம் அந்த ஸஹாபி குறித்தவொரு செயலை பற்றி ரஸுலுல்லாஹ்விடம் கேட்கவில்லை. பொதுவாக ஸதகா செய்தால் அது இறந்தவரை போய்ச் சேரும் என்றுதான் ரஸுலுல்லாஹ் கூறுகிறார். இதிலிருந்து ஸதகா எனும் வரையறைக்குள் அடங்கும் எந்தச் செயலையும் செய்து அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்த்து வைக்கலாம் என்பது தெளிவு.இனி ஸதகாவினுள் அடங்கும் செயல்கள் எவை என்பதையும் ரஸுலுல்லாஹ் கூறாமல் போகவில்லை.