ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த உம்மத்துக்காக அவர்களுடைய தீனை உயிர்ப்பிக்கக் கூடிய முஜத்தித் ஒருவரை அனுப்புவான்.
நூல் - அபூ தாவூத், ஹாகிம்.
ஹதீத் கலை மேதையான ஹாபிழ் இமாம் தஹபி (رحمه الله) ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்தித் சம்பந்தமாகவும் தமது ஸியரில் பின்வருமாறு கூறுகிறார்:
நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த உம்மத்துக்காக அவர்களுடைய தீனை உயிர்ப்பிக்கக் கூடிய முஜத்தித் ஒருவரை அனுப்புவான்.
நூல் - அபூ தாவூத், ஹாகிம்.
ஹதீத் கலை மேதையான ஹாபிழ் இமாம் தஹபி (رحمه الله) ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்தித் சம்பந்தமாகவும் தமது ஸியரில் பின்வருமாறு கூறுகிறார்:
ஹஸ்ஸான் இப்னு முஹம்மத் கூற தான் கேட்டதாக அல்-ஹாகிம் கூறுகிறார்:ஹிஜ்ரி 303 இல் நாங்கள் இப்னு சுரைஜுடைய மஜ்லிஸில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அறிஞர்களில் ஒருவரான ஒரு ஷெய்க் எழுந்து "நற்செய்தி ஓ நீதிபதியே (இப்னு சுரைஜ்)! " நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை புதுப்பிக்கக் கூடிய ஒருத்தரை (முஜத்தித்) அனுப்புகிறான்.முதலாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உமர் இப்னு அப்தில் அஸீஸை அனுப்பினான். இரண்டாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபியை அனுப்பினான். மூன்றாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உங்களை (இப்னு சுரைஜ்) அனுப்பியுள்ளான்... எனக் கூறினார்.
நான் (இமாம் தஹபி) கூறுகிறேன்:நாலாம் நூற்றாண்டில் ஷெய்க் அபூ ஹாமித் இஸ்ஃபராயீனீ இருந்தார்.ஐந்தாம் நூற்றாண்டில் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலி இருந்தார்.ஆறாம் நூற்றாண்டில் ஹாபிழ் அப்துல் கனீ இருந்தார்.ஏழாம் நூற்றாண்டில் ஷெய்குனா அபுல் ஃபத்ஹ் இப்னு தகீகுல் ஈத் இருந்தார்.
9ம் நூற்றாண்டின் முஜத்திதான ஹதீத் மற்றும் பிக்ஹ் கலை மேதை ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி (رحمه الله) அவர்கள் தமது "تحفة المجتهدين بأسماء المجددين" எனும் நூலில் ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்திதுகளையும் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.
- 1ம் நூற்றாண்டு - உமர் இப்னு அப்தில் அஸீஸ்
- 2ம் நூற்றாண்டு - ஷாபியீ
- 3ம் நூற்றாண்டு - இப்னு சுரைஜ் மற்றும் அபுல் ஹஸன் அல்-அஷரீ
- 4ம் நூற்றாண்டு - அல்-பாக்கில்லானீ, ஸஹ்ல் அல்-ஸுலூகி, அபூ ஹாமித் இஸ்ஃபராயீனீ
- 5ம் நூற்றாண்டு - அல்-கஸ்ஸாலி
- 6ம் நூற்றாண்டு - ஃபக்ருத்தீன் அர்-ராஸீ , அர்-ராஃபீ
- 7ம் நூற்றாண்டு - இப்னு தகீகுல் ஈத்
- 8ம் நூற்றாண்டு - அல்-புல்கினி, அல்-இராக்கீ
- 9ம் நூற்றாண்டு - ஸுயூத்தி
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலீ (رحمه الله) ஏகமானதாக 5ம் நூற்றாண்டின் முஜத்தித் என இந்த உம்மாவின் இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்..
1.
الكتب
»
سير أعلام النبلاء »
الطبقة السابعة عشر »
ابن سريج
وقال الحاكم سمعت حسان بن محمد يقول : كنا في مجلس ابن سريج سنة ثلاث وثلاثمائة ، فقام إليه شيخ من أهل العلم فقال : أبشر أيها القاضي ، فإن الله يبعث على رأس كل مائة سنة من يجدد - يعني للأمة - أمر دينها وإن الله تعالى بعث على رأس المائة عمر بن عبد العزيز ، وبعث على رأس المائتين محمد بن إدريس الشافعي ، وبعثك على رأس الثلاثمائة ، ثم أنشأ يقول :
اثنان قد ذهبا فبورك فيهما عمر الخليفة ثم حلف السؤدد الشافعي الألمعي محمد
إرث النبوة وابن عم محمد أبشر أبا العباس إنك ثالث
من بعدهم سقيا لتربة أحمد
قال : فصاح أبو العباس ، وبكى ، وقال : لقد نعى إلي نفسي . قال حسان الفقيه : فمات القاضي أبو العباس تلك السنة . إرث النبوة وابن عم محمد أبشر أبا العباس إنك ثالث
من بعدهم سقيا لتربة أحمد
قلت : وقد كان على رأس الأربعمائة الشيخ أبو حامد الإسفراييني ، وعلى رأس الخمسمائة أبو حامد الغزالي ، وعلى رأس الستمائة الحافظ عبد الغني ، وعلى رأس السبعمائة شيخنا أبو الفتح ابن دقيق العيد .
-இப்னு தாஹிர்-
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.